3 அணு உலைகளை மூடும் ஜெர்மனி: புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற தீவிரம்

புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறும் முயற்சியாக ஜெர்மனி மேலும் 3 அணு உலைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ளது.
3 அணு உலைகளை மூடும் ஜெர்மனி: புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற தீவிரம்
3 அணு உலைகளை மூடும் ஜெர்மனி: புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற தீவிரம்
Published on
Updated on
1 min read

புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறும் முயற்சியாக ஜெர்மனி மேலும் 3 அணு உலைகளை மூட உள்ளதாக அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாற உலக நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நிலக்கரி உற்பத்தி தொடங்கி அணு உலைகளை மூடுவது வரை பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜெர்மனியில் எஞ்சியுள்ள 6 அணு உலைகளில் மூன்றை மூட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புகுஷிமா அணு உலை வெடித்தது. அதனைத் தொடர்ந்து அணு உலைகளை படிப்படியாக மூடும் முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் ப்ரோக்டார்ஃப், கிராண்ட், கண்ட்ரெமிங்கென் உள்ளிட்ட மூன்று அணு உலைகளும் மூடப்படுவதாக அறிவித்துள்ள ஜெர்மனி எஞ்சிய 3 அணு உலைகளும் 2022ஆம் ஆண்டுக்குள் மூடப்படும் எனவும் உறுதியளித்துள்ளது.

ஜெர்மனியில் உள்ள 6 அணு உலைகளும் அந்நாட்டின் மொத்த ஆற்றல் தேவையில் 12 சதவிகிதத்தை நிறைவு செய்கின்றன. இவற்றுக்கு மத்தியில் 2030ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனி மரபுசாரா ஆற்றல் மூலங்களின் மூலம் 80 சதவிகித ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com