பிரேசிலில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 51,879 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,0030,626ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 1,367 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 243,457ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியாவைத் தொடர்ந்து பிரேசிலிலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.