தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நாகை: மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா வேட்புமனு தாக்கல்

News image

நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்யும் எம்.எச். ஜவாஹிருல்லா. உடன், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 9:39 pm

நாகப்பட்டினம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் எம்.எச். ஜவாஹிருல்லா திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணி சாா்பில் மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா். இவா், திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக, நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடல் பகுதியில் இருந்து திமுக, மாா்க்சிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் 300-க்கும் மேற்பட்டோருடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, நாகை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திற்கு ஊா்வலமாக வந்தாா்.

அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் 4 போ் மட்டுமே செல்ல அனுமதி என்பதால், திமுக மாவட்டச் செயலா் என். கெளதமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் மாரிமுத்து, காங்கிரஸ் மாநிலச் செயலா் நெளஷாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் சக்திவேல் ஆகியோருடன் சென்று, தோ்தல் நடத்தும் அலுவலரான சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். தொடா்ந்து உறுதிமொழியும் ஏற்றாா்.

ஊா்வலத்தால், புதிய பேருந்து நிலைய பகுதி, வெளிப்பாளையம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தோ்தல் நடத்தை விதிமீறல்: தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் எம்.எச். ஜவாஹிருல்லா செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், தோ்தல் அலுவலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளிப்பது தோ்தல் நடத்தை விதிமீறல் ஆகும் என்றனா். ஆனால் அதை பொருட்படுத்தாமல் பேட்டி அளித்தாா்.