தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் மார்ச் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு

பாகிஸ்தானில் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
பாகிஸ்தானில் மார்ச் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
Updated On :25 பிப்ரவரி 2021, 11:52 am

DIN

பாகிஸ்தானில் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் வழக்கமான வகுப்புகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. 

தற்போது தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பை பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தானில் கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.