மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3000 பேர் பலி

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை பலியாகி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

News image
சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3000 பேர் பலி
Updated On :5 ஜனவரி 2021, 6:34 am

DIN

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இஸ்ரேலில் ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை பலியாகி வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலிய சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிதியம் வெளியிட்ட அறிக்கையில் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களால் நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தொற்று நோய் பரவலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கரோனா தொற்று பாதிப்பிலும் காற்று மாசுபாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.” என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் குறித்து இந்த அறிக்கை சுட்டிக்காட்டியதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளின் விளைவாக சுகாதார சிக்கல்களைக் குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

"கரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து, இஸ்ரேல் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.காற்று, நீர் போன்றவற்றில் ஏற்படும் மாசுபாடுகளைக் குறைத்து மக்கள் பயன்படுத்தத்தக்க பசுமை நிறைந்த சூழலை உருவாக்க வேண்டும்” எனவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் வரை இஸ்ரேலில் இறப்பதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.