உருமாறிய கரோனாவால் திணறும் பிரிட்டன்: பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியது

பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது. உருமாறிய கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


பிரிட்டனில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,868 ஆக அதிகரித்துள்ளது. 

பிரிட்ட முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 59,937 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,17,409-ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 12 ஆவது நாளாக 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. 

தொற்று பாதிப்புக்கு மேலும் 1,035 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80,868 ஆக உயர்ந்துள்ளது

கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,406,967-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 15,29,574 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com