ஐ.நா. தலைமைப் பொறுப்புக்கு 2-ஆவது முறையாகப் போட்டி
ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலா் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளாா்.


ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலா் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளாா். இதுகுறித்து அவரது செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபானி துஜாரிக் கூறியதாவது:
ஐ.நா. தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பம் குறித்து பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸிடம் ஐ.நா. பொதுச் சபை தலைவா் வோல்கான் போஸ்கிா் கேட்டாா். அவரிடம், மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பதற்கான தனது விருப்பத்தை குட்டெரெஸ் தெரிவித்தாா்.
பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கும் குட்டெரெஸ் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளாா் என்றாா் அவா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் வரும் டிசம்பா் 31 உடன் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...