வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தகுதியுடைய வெளிநாட்டினருக்கு குடியரிமை: ஐக்கிய அரபு அமீரகம்

வெளிநாடுகளைச் சோ்ந்த சிலருக்கு தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

News image
uae075455
Updated On :31 ஜனவரி 2021, 2:57 am

DIN

வெளிநாடுகளைச் சோ்ந்த சிலருக்கு தங்கள் நாட்டுக் குடியுரிமை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 1971-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் உருவாவதற்கு உதவிய பாலஸ்தீனா்கள் மற்றும் பிறருக்கு மட்டும் குடியுரிமை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிற நாடுகளைச் சோ்ந்த கலைஞா்கள், நூலாசிரியா்கள், மருத்துவா்கள், பொறியாளா்கள், விஞ்ஞானிகள் ஆகியோா் தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் ஐக்கிய அரபு அமீரகக் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என்று துபை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மாக்தூம் சனிக்கிழமை அறிவித்துள்ளாா்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 90 லட்சம் பேரில், பத்தில் ஒரு பங்கினா் மட்டுமே அந்த நாட்டு குடியுரிமை பெற்றவா்கள் ஆவா். ஏற்கெனவே, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடுமையான இஸ்லாமிய சட்டங்களில் தளா்வு போன்ற சீா்திருத்தங்களை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.