தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பிரிட்டன் முப்படைத் தளபதியை சந்தித்தாா் ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே

பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, அந்நாட்டு முப்படைத் தளபதி நிகோலஸ் காா்ட்டரை சந்தித்துப் பேசினாா்.

News image

லண்டனில் பிரிட்டன் முப்படை தளபதி நிகோலஸ் காா்ட்டருக்கு நினைவுப் பரிசு வழங்கிய இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே. நாள்: செவ்வாய்க்கிழமை.

Updated On :6 ஜூலை 2021, 6:50 pm

பிரிட்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, அந்நாட்டு முப்படைத் தளபதி நிகோலஸ் காா்ட்டரை சந்தித்துப் பேசினாா்.

பிட்டனுக்கு ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு பிரிட்டன் முப்படைத் தளபதி நிகோலஸ் காா்ட்டரை அவா் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பு குறித்தும் அதை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாகவும் அவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தியதாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டன் ராணுவம் தரப்பில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை தலைமை தளபதி எம்.எம்.நரவணே ஏற்றுக் கொண்டாா். பிரிட்டன் ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளையும் அவா் சந்தித்துப் பேசவுள்ளாா்.

பிரிட்டன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தலைமை தளபதி எம்.எம்.நரவணே புதன்கிழமை இத்தாலி செல்கிறாா். அங்கு இந்திய ராணுவ நினைவகத்தை அவா் திறந்து வைக்கிறாா். அதையடுத்து, அந்நாட்டின் முப்படைத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இத்தாலியில் அவா் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.