சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தென்னாப்பிரிக்காவில் வெடித்த கலவரம்..காரணம் என்ன?

தென்னாப்பிரக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சுமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 72 பேர் பலியாகினர்.

News image
Updated On :15 ஜூலை 2021, 12:06 pm

DIN

தென்னாப்பிரக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சுமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 72 பேர் பலியாகினர்.

தென்னாப்பிரக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் சுமா ஊழலில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கின் விசாரணையில் ஆஜராகாத காணத்தால் சுமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை கடந்த வாரம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சுமாவை விடுதலை செய்யக் கோரி அவரின் சொந்த மாகாணமான குவாசுலு-நடாலில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அண்டை மாகாணங்களான முமலங்கா, கடெங், வடக்கு கேப் ஆகிய பகுதிகளில் கலவரம் வெடித்தது. ஜோகன்னஸ்பர்க், டர்பன் ஆகிய முக்கிய நகரங்களில் கடைகள் சூரையாடப்பட்டன.

கரோனா மூன்றாம் அலை பரவிவரும் நிலையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. 2009-18 காலக்கட்டத்தில் அதிபராக இருந்த சுமா, பல்வேறு ஊழல்களில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள், உயர் மட்ட அரசு அலுவலர்கள், அரசு நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோரே சுமாவுக்கு எதிராக சாட்சியம் கூறியுள்ளனர். குறிப்பாக, அமைச்சர்களின் நியமனத்தில் குப்தா குடும்பத்தின் தலையீடு இருந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கடந்த 1999ஆம் ஆண்டு பாதுகாப்பு ஆயுதங்கள் ஒப்பந்தத்தில் அவர் லஞ்சம் வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. பொருளதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, பட்டினி சாவு ஆகிய காரணங்களால் அதிருப்தியில் இருந்த மக்களை சுமாவின் கைது மேலும் கோபம் கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.