ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரிட்டன் அமைச்சருக்கு கரோனா

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :17 ஜூலை 2021, 3:20 pm

DIN


இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் லேசான அறிகுறிகளுடன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதுபற்றி ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது:

"இன்று காலை நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனது பிசிஆர் முடிவுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால், இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுவிட்டேன். லேசான அறிகுறிகளே உள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லையெனில் நீங்களும் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்."

ஜாவித் கடந்த செவ்வாய்க்கிழமை தெற்கு லண்டனிலுள்ள காப்பகத்துக்குச் சென்றார். அதே தினம் நாடாளுமன்றத்திலும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.