மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வங்கதேசம்  : நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் பலி

வங்கதேசத்தின்  காஸ் பஜார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

News image

வங்கதேசம்  : நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் பலி

Updated On :28 ஜூலை 2021, 10:48 am

வங்கதேசத்தின்  காஸ் பஜார் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள் , மூன்று பெண் குழந்தைகள் எனவும் அவர்களின்  பெற்றோர்கள் இடைவிடாத கனமழை காரணமாக அபாயத்தை உணர்ந்து வீட்டை வெளியே பாதுகாப்பான இடத்திற்கு  சென்றுவிட்டனர் எனவும்  தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

அதை அறியாமல் தூங்கிக்கொண்டிருந்த குழைந்தைகள் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கி இறந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தும் நிலச்சரிவுகளில் சிக்கியிருப்பதாலும்  மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
 
தொடர்ந்து அங்கு பெய்துவரும் கனமழையால் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) 8 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது . 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.