ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

‘மோசமான கரோனா தடுப்பு நடவடிக்கை’:மலேசிய பிரதமர் பதவி விலகக்கோரி இளைஞர்கள் போராட்டம்

மோசமான முறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகக்கோரி கோலாலம்பூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
‘மோசமான கரோனா தடுப்பு நடவடிக்கை’:மலேசிய பிரதமர் பதவி விலகக்கோரி இளைஞர்கள் போராட்டம்
Updated On :31 ஜூலை 2021, 1:27 pm

DIN

மோசமான முறையில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதாகக் கூறி மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகக்கோரி கோலாலம்பூரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலேசியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தொற்று பரவல் அதிகரித்தவண்ணம் உள்ளது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டாலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் முகைதீன் யாசின் பதவிவிலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைகளில் பிரதமர் பதவி விலகக்கோரி எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

பிரதமர் பதவி விலக வேண்டும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடனுதவி கிடைக்கச் செய்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.

மலேசியாவில் இதுவரை 11 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9000 பேர் தொற்று பாதிப்பினால் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.