தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி: சுவிட்சர்லாந்து

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு கரோனா பரிசோதனையின்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

News image

தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியப் பயணிகளுக்கு அனுமதி: சுவிட்சர்லாந்து

Updated On :29 ஜூன் 2021, 10:34 am

DIN

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு கரோனா பரிசோதனையின்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் அதிகரித்து வந்த கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தன. 

இந்நிலையில் தொற்று பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுடனான பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.

ஜூன் 26ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் கரோனா கட்டுப்பாடுகளுக்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியா உள்ளிட்ட பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் கரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலின்றி நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.