பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஈரானுக்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கும் இந்தியா

ஈரான் நாட்டிற்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
ஈரானிற்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கும் இந்தியா
Updated On :12 மார்ச் 2021, 12:30 pm

DIN

ஈரான் நாட்டிற்கு 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஈரான் நாட்டிற்கு மத்திய அரசின் சார்பில் மொத்தம் 5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 1.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் ஈரானுக்கு வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய 3.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் ஈரானை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.