ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இத்தாலியில் மீண்டும் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஈஸ்டர் பண்டிகையின் போது நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என  இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.

News image
இத்தாலியில் மீண்டும் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிப்பு
Updated On :13 மார்ச் 2021, 11:44 am

DIN

ஈஸ்டர் பண்டிகையின் போது கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தாலியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாட்டின் லோம்பார்டி, லோசியோ உள்ளிட்ட 7 நகரங்களில் கரோனா தொற்று பரவல் அதிக பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.

இந்நிலையில் இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் கரோனா பரவல் 10% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.