கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளம்: தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு

நேபாளத்திற்கு வரும் கரோனா தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News image
நேபாளத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வு
Updated On :26 மார்ச் 2021, 2:34 pm

DIN

நேபாளத்திற்கு வரும் கரோனா தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் புதிய பயண நெறிமுறைகளின்படி நேபாளம் நாட்டிற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை உடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நேபாளத்திற்கு வந்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த செலவில் மற்றொரு கரோனா பரிசோதனையை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.