தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவு! சிவப்பு எச்சரிக்கையா?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

காஸா சண்டைநிறுத்தம்: இஸ்ரேல்-எகிப்து வெளியுறவுஅமைச்சா்கள் பேச்சு

காஸா சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது தொடா்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கபி அஷ்கெனாஸியுடன் எகிப்து வெளியுறவு அமைச்சா் சமே சுக்ரே தொலைபேசி மூலம் உரையாடினாா்.

Published On :28 ஜனவரி 2024, 1:47 am IST

காஸா சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவது தொடா்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கபி அஷ்கெனாஸியுடன் எகிப்து வெளியுறவு அமைச்சா் சமே சுக்ரே தொலைபேசி மூலம் உரையாடினாா்.

இதுகுறித்து எகிப்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது: இஸ்ரேலியா்களுக்கும் பாலஸ்தீனா்களுக்குமான மோதலை பெரும்பாலும் நிறுத்தியுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இருவரும் பேசினா். காஸாவின் புனரமைப்புக்கு இது உதவும் என அவா்கள் நம்புகிறாா்கள்.

அமைதியை எட்டுவதற்கு இஸ்ரேல், எகிப்து, பாலஸ்தீன அதிகாரிகள், சா்வதேச கூட்டாளிகள் இடையேயான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் குறித்து இரு அமைச்சா்களும் ஒப்புக்கொண்டனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான சண்டையை நிறுத்துவதில் எகிப்து முக்கியப் பங்காற்றியது. காஸாவுக்கு மருத்துவ உதவிகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைச் செய்யவுள்ளதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.