

வடக்கு தீவான ஹொக்கைடோவில் இருந்து ரஷிய கப்பலின் மீது ஜப்பானிய மீன்பிடிக் கப்பல் மோதிய விபத்தில், கப்பலில் இருந்து மூன்று பேர் உயிரிழந்தனர்.
9.7 டன் நண்டு ஏற்றிச்சென்ற ஜப்பானிய மீன்பிடி படகு 662 டன் உள்ள ரஷிய அமுர் கப்பலுடன் மோதி கவிழ்ந்துள்ளது. படகில் 5 பேர் பயணித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணியினர் ஐந்து பேரையும் மீட்டது. ஆனால் 64 வயதான தலைமை பொறியாளர் மற்றும் 30 வயதில் இரண்டு குழு உறுப்பினர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் ஹொக்கைடோவில் உள்ள மோன்பெட்சு துறைமுகத்திலிருந்து வடகிழக்கில் சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் காலை 6 மணியளவில் நடந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்று ஜப்பான் கடலோர காவல்படை விசாரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.