ஆப்கானிஸ்தானில் லோகர் மாகாணத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்ததாக ராணுவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது ஆகா மாவட்டத்தின் சர்கோன் ஷா பகுதியில் உள்ள தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
மேற்கு ஹெராத் மாகாணத்தின் ஷிண்டந்த் மற்றும் ஓபே மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு இதேபோன்ற வான்வழித் தாக்குதல்களில் 24 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து தலிபான் அமைப்பு இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.