கொலம்பியாவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொலம்பியாவில் இதுவரை 50 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .
இதையும் படிக்க | பெரு: கரோனாவால் 2 லட்சம் பேர் பலி
நேற்று (அக்-31) ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி புதிதாக 1,629 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 50,02,813 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,27,840 ஆகப் பதிவாகியிருக்கிறது.
மேலும் கொலம்பியாவில் 2.14 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டனர்.