ஈரானில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 60 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 8,305 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 60,04,460-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 112 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,27,551-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஈரானில் இதுவரை 56,29,596 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,47,313 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3,640 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.