வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

17 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா அதிகரிப்பு; பெய்ஜிங்கில் நிகழ்ச்சிகள் ரத்து

பெய்ஜிங்கில் சமீபத்தில் ஏற்பட்ட கரோனா அலை வேகமாக பரவி, பலரை பாதிப்புக்குள்ளாக்கி வைரஸின் பரவல் பாதை விரிவடைய காரணமாகியுள்ளது என நகரின் அரசு செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியான் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2021, 9:56 am

DIN

பெய்ஜிங்கில் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு, சமீபத்தில் ஏற்பட்ட கரோனா அலை அதன் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, பெய்ஜிங் நகரம் முடங்கியுள்ளது. எனவே, நிகழ்ச்சிகளையும் பணியையும் இணையம் மூலம் நடத்த அலுவலர்கள் அறிவுறித்தியுள்ளனர்.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை சார்பாக வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

அதில், அவசியம் இல்லாத அனைத்து மாநாடுகளையும் நிறுவனங்கள் ரத்து செய்ய வேண்டும் என அப்போது அறிவுறத்தப்பட்டது. அதேபோல, மக்கள் கூடுவதை பெருமளவு தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அதை மீறியும் நிகழ்ச்சிகளை நடத்தினால் அந்நிறுவனங்களும் தனிநபர்களுமே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் சமீபத்திய கரோனா அலை காரணமாக மொத்தமாக 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020 ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரையிலான காலக்கட்டத்தில், இதுவே அதிகப்படியான கரோனா எண்ணிக்கையாகும்.

கடந்த ஐந்து மாதங்களாக, அதிக பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனாவால் ஏற்பட்ட அலையை கட்டுப்படுத்த முடியாமல் சீனா திணறி வருகிறது. நாடு முழுவதும் 21 மாகாணங்களில், 1000க்கும் மேற்பட்டோருக்கு உள்ளூரிலிருந்தே கரோனா பரவியுள்ளது. வூஹானிலிருந்து கரோனா பரவ தொடங்கிய காலத்திலிருந்து பார்த்தால், இந்தளவுக்கு கரோனா பரந்து விரிந்து பரவியதே இல்லை.

இதுகுறித்து நகர அரசின் செய்தித்தொடர்பாளர் சூ ஹெஜியான் கூறுகையில், "பெய்ஜிங்கில் சமீபத்திய அலை வேகமாக வந்து அதிக எண்ணிக்கையிலான மக்களை பாதித்து, நோயின் பரவலான பாதையை உருவாக்கியது. குறிப்பாக, இதன் காரணமாக, பரவலை கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.