இதுதொடா்பாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை அறிவுறுத்தலில், ‘பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபா் ஆகிய மாகாணங்களுக்கும், பழங்குடியினா் பகுதிகளுக்கும் செல்வதைத் தவிா்க்க வேண்டும். பயங்கரவாதம், ஆள்கடத்தல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பயங்கரவாதத்தால் எந்நேரமும் ஆயுத மோதல் ஏற்படலாம். பயங்கரவாத குழுக்கள் பாகிஸ்தானில் தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அப்பாவி மக்கள், ராணுவத்தினா், போலீஸாா் மீது உள்ளூா் கிளா்ச்சியாளா் குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றன. அமெரிக்க அதிகாரிகள், பயணிகள் மீது முன்பும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளன. 2014 முதல் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையால் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமாபாதில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைவாக உள்ளதால் தாக்குதல்களும் குறைந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.