மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

6 நாடுகளுடனான விமானப் போக்குரத்துக்கு இலங்கை அரசு தடை

புதிய வகை கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 6 தென்னாப்பிரிக்க நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு இலங்கை அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

News image

6 நாடுகளுடனான விமானப் போக்குரத்துக்கு இலங்கை அரசு தடை

Updated On :27 நவம்பர் 2021, 10:34 am

புதிய வகை கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 6 தென்னாப்பிரிக்க நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு இலங்கை அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் எனும் புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இலங்கை அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதனொரு பகுதியாக 6 தென்னாப்பிரிக்க நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதித்து அந்நாட்டு அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாவே, நமிபியா, லெசோதோ மற்றும் எஸ்வதினி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை உத்தரவு அமலாகிறது.

முன்னதாக நவம்பர் 24ஆம் தேதி புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருப்பது அந்நாடுகளின் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.