சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ஜப்பானில் முதல் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான் பாதிப்பு ஜப்பானில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

ஜப்பானில் முதல் ஒமைக்ரான் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Updated On :28 ஜனவரி 2024, 11:05 am IST


டோக்யோ: பல அடுக்கு உருமாற்றம் பெற்ற புதிய வகை கரோனா வைரஸான ஒமைக்ரான் பாதிப்பு ஜப்பானில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானுக்கு அண்மையில் நமீபியாவிலிருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணிக்கு ஒமைக்ரான் வகை கரோனா பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து அமைச்சரவைச் செயலாளர் கூறுகையில், ஒமைக்ரான் வகை கரோனா பாதித்த நோயாளி 30 வயதுடைய நபர். ஜப்பானுக்கு வந்த அவருக்கு, ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பரவியிருந்த கரோனா வைரஸின் மரபணு வரிசைமுறையை பரிசோதித்ததில், அவருக்கு புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது முதன் முதலில் தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட வைரஸாகும்.

ஒமிக்ரான் வைரஸ், தென்னாப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் நாட்டுக்குள் நுழைய நேற்று தடை விதித்தது ஜப்பான். 

இந்த தடை உத்தரவு திங்கள்கிழமை பிறப்பிக்கப்பட்ட நிலையில், இது செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்திருந்தார்.

வணிகர்கள், வெளிநாட்டு மாணவர்கள், வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக இந்த மாதத் தொடக்கத்தில் திறந்துவிடப்பட்ட எல்லைப் போக்குவரத்து மீண்டும் மூடப்படுவதை இந்த அறிவிப்பு வெளிக்காட்டுகிறது.

முன்னதாக, தென்னாப்ரிக்கா மற்றும் அதன் 8 அண்டை நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், 10 நாள்கள் தனிமைப்படுத்துதலையும் ஜப்பான் அறிவித்திருந்தது. ஆனால், ஒமைக்ரான் வைரஸ் பல நாடுகளில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடு இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், புதிய ஒமைக்ரான் பாதிப்பு ஜப்பானில் இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.