கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவி பாதிப்பு; யூனிசெஃப்

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் அறிவித்துள்ளது.

News image

ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவி பாதிப்பு; யூனிசெஃப்

Updated On :30 நவம்பர் 2021, 10:15 am

ANI


நியூ யார்க்: 2020ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கரோனா பாதிப்பினால் கடும் இன்னல்களை சந்தித்துக் கொண்டிருந்த அதேவேளையில, ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என்ற விகிதத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 3 லட்சம் குழந்தைகள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக யூனிசெஃப் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

நீடித்திருக்கும் கரோனா பேரிடர் காரணமாக, எச்ஐவி பேரிடரைத்த தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறையை தீவிரப்படுத்துவது குறைந்ததால், குழந்தைகள், பெரியவர்கள், தாய்மார்கள் என பலரும் எச்ஐவி பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் யூனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது.

எச்ஐவி பேரிடர் ஏற்கனவே 50 ஆண்டுகளாக நாட்டின் சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. தற்போது கரோனா பேரிடர், சுகாதாரத் துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அதிகரிக்கும் வறுமை, மனநல பாதிப்புகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரிப்பும், எச்ஐவி பாதிப்பு அதிகரிக்கக் காரணங்களாக அமைகின்றன என்று யூனிசெஃப் செயல் இயக்குநர் ஹென்ரிட்டா ஃபோரே தெரிவித்துள்ளார்.

கரோனா பேரிடர் காரணமாக, எச்ஐவி பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும், எச்ஐவிக்கு எதிரான போராட்டத்தில் பலியாகும் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.