மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரசியலிலிருந்து பிரியாவிடை பெறும் பிலிப்பைன்ஸ் அதிபர்

தனது அரசியல் வாரிசு யார் என்பதை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே இன்னும் அறிவிக்காதநிலையில், அந்த இடத்தை அவரின் மகள் சாரா பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News image
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே
Updated On :2 அக்டோபர் 2021, 11:06 am

DIN

வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள துணை அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம், நாட்டின் உயர்மிக பதவிக்கு அவரின் மகள் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரோட்ரிகோ கூறுகையில், "துணை அதிபர் தேர்தலில் போட்டியிட நான் தகுதியற்றவன் என்றே பெரும்பாலான பிலிப்பைன்ஸ் மக்கள் கருதுகின்றனர். அதை மீறி போட்டியிட்டால், அது அரசியலமைப்பை மீறி சட்டத்தை தவிர்க்கும் செயலாகும். எனவே, அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதை இன்று அறிவிக்கிறேன்" என்றார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், போதை மருந்துகள் இல்லா நாட்டை படைப்பேன் என உறுதி மொழி அளித்தார். இதையடுத்து, மிகப் பெரிய வெற்றியை தன்வசப்படுத்தினார். அன்றைய சூழலை போலவே, ரோட்ரிகோவுக்கு இன்றும் மக்களிடம் மிகப் பெரிய ஆதரவு இருப்பது கருத்துகணிப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும், அங்கு இரண்டாவது முறையாக போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அடுத்த துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என ரோட்ரிகோ ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தார். பதவியிலிருந்து விலகினால், அவருக்கு எதிரான குற்றச் செயல்கள் விசாரிக்கப்படும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தேர்தலில் போட்டியிடுவதை அவர் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும், அரசியிலிலிருந்து எப்போது விலகுவார் என்பது அறிவிக்கப்படவில்லை. தனது அரசியல் வாரிசு யார் என்பதை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே இன்னும் அறிவிக்காதநிலையில், அந்த இடத்தை அவரின் மகள் சாரா பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.