பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ரஷியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 29,362 பேருக்கு கரோனா

ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 29,362 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 அக்டோபர் 2021, 11:37 am

DIN

ரஷியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 29,362 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 29,362 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் 2,600 பேருக்கு அறிகுறியற்ற நிலையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக மாஸ்கோவில் 6,001 பேரும், செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் 2,717 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 77,46,718ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் இன்று மேலும் 968 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2,15,453 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து 20,556 பேர் மீண்டனர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 68,40,845 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.