கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் எதுவும் செய்யக்கூடாது: அமெரிக்காவுக்கு தலிபான்கள் எச்சரிக்கை

ஆப்கானிஸ்கானின் பிரச்னைகள் குறித்து அமெரிக்கா உள்பட பல நாடுகளுடன் ஆலோசிக்கப்படும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :10 அக்டோபர் 2021, 7:47 am

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிதை அடுத்து, முதல்முறையாக தலிபான், அமெரிக்கா இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், ஆட்சியை பலவீனப்படுத்தும் வகையில் எதுவும் செய்யக்கூடாது என அமெரிக்காவை எச்சரித்ததாக ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆமிர் கான் முட்டாகி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க படைகளால் தலிபான்கள் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு மீண்டும் ஆட்சி அமைத்துள்ள தலிபான்கள் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முட்டாகி இதுகுறித்து விரிவாக பேசுகையில், "ஆப்கானிஸ்தானில் அரசை சீர்குலைக்க முயற்சிப்பது யாருக்கும் நல்லதல்ல என்று நாங்கள் அவர்களிடம் தெளிவாக கூறினோம்.

ஆப்கானிஸ்தானுடனான நல்லுறவே அனைவருக்கும் நல்லது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அரசை வலுவிழக்கச் செய்ய எதுவும் செய்யக்கூடாது. அது மக்களுக்குப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆப்கானிஸ்தானில் கரோனா தடுப்பூசி போட அமெரிக்கா உதவும். ஆப்கன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க அமெரிக்காவிலிருந்து வந்த பிரதிநிதிகள் முடிவு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மிகவும் கடினமான காலத்தை கடந்து செல்லும் நிலையில், பொறுமையாக இருந்து அமெரிக்கா நல்ல உறவை பேணி காக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆப்கானிஸ்தான் இந்த பிரச்னையிலிருந்து அதிக பலத்துடன் வெளியே வரும்" என்றார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சிறப்பு துணை பிரிதிநிதி டாம் வெஸ்ட், அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி முகமை அலுவலர் சாரா சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க எந்த கருத்தும் இன்னும் தெரிவிக்கவில்லை.

ஆட்சியை உறுதிப்படுத்த தலிபான்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், வெள்ளிக்கிழமை ஷியா பிரிவு மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்திருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டிவெடிப்புக்கு ஐஎஸ் கோரசான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.