நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

100 கோடி தடுப்பூசிகள்: இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

News image

100 கோடி தடுப்பூசிகள்: இந்தியாவிற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

Updated On :21 அக்டோபர் 2021, 11:37 am

DIN

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. கடந்த 9 மாதங்களில் இதுவரை நாடு முழுவதும் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக  இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 

இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள். கரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காக்க கரோனா தடுப்பூசி செலுத்தும் உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.