பிலிப்பின்ஸ் : கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு

பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிலிப்பின்ஸ் : கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு
பிலிப்பின்ஸ் : கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிப்பு
Published on
Updated on
1 min read

பிலிப்பின்ஸ் நாட்டில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிலிப்பின்ஸின் இதுவரை 20.03 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

இன்று (புதன்கிழமை) நிலவரப்படி 14,216 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதுடன் ஒட்டுமொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,03,955 ஆக உயர்ந்திருக்கிறது.

மேலும் இதுவரை தொற்றால் 33,533 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

11 கோடி பேர் மக்கள் தொகை கொண்ட பிலிப்பின்ஸ் நாட்டில் 1.71 கோடி பேருக்கு மாதிரி பரிசோதனைகள் நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com