கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆப்கன் விமான தளத்தை கைப்பற்ற முயற்சிக்கும் சீனா: முன்னாள் அமெரிக்க தூதர் குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் விமான தளத்தை கைப்பற்ற சீனா முயற்சிக்கலாம் என அமெரிக்காவின் முன்னாள் மூத்த தூதர் நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 செப்டம்பர் 2021, 11:39 am

DIN

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் விமான தளத்தை கைப்பற்ற சீனா முயற்சிக்கலாம் என அமெரிக்காவின் முன்னாள் மூத்த தூதர் நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து, பக்ரம் விமான தளத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா முயற்சிக்கலாம் என்றும் அமெரிக்கா சீனாவை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அமெரிக்காவின் முன்னாள் மூத்த தூதர் நிக்கி ஹேலி எச்சரித்துள்ளார்.

ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஹேலி ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து மேலும் கூறுகையில், "ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பபெறும் முடிவை அமெரிக்க அவசர அவசரமாக எடுத்ததால் கூட்டு நாடுகளின் நம்பிக்கையை அதிபர் ஜோ பைடன் இழந்துள்ளார். அமெரிக்காவின் முன்பு பல சவால்கள் உள்ளன. 

மக்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? சைபர் பாதுகாப்பு வலிமையாக உள்ளதா? என்பதை அமெரிக்க உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், எதிர்த்து போரிடும் துணிச்சலை வெளிப்படுத்தாதால் ரஷ்யா போன்ற நாடுகள் தொடர்ந்து ஹேக் செய்துவருகிறது. பக்ரம் விமான தளத்தை கைப்பற்ற சீனா முயற்சி மேற்கொள்ளலாம் எனவே தொடர்ந்து அவர்களை கண்காணிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை பயன்படுத்த கூட சீனா முயற்சிக்கலாம். எனவே, நமக்கு பல பிரச்னைகள் உள்ளது. 

கூட்டு நாடுகளை வலுப்படுத்த வேண்டும். அவர்களுடனான உறவை வலுப்படுத்த வேண்டும். நம் ராணுவத்தை நவீனமயமாக்க வேண்டும். சைபர் குற்றங்களையும் பயங்கரவாத குற்றங்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமோ என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

20 ஆண்டுகளாக, அமெரிக்க ராணுவத்தின் கோட்டையாக பக்ரம் விமான தளம் விளங்கியது. ஆயிரக்கணக்கான அமெரிக்க படைகள் அங்குதான் நிலைநிறுத்தப்பட்டது. இறுதியாக, அமெரிக்க படை ஜூலை மாதம் அங்கிருந்து வெளியேறியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.