25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

நியூயார்க்கில் வரலாறு காணாத வெள்ளம்: இன்று இரவுமுதல் அவசரநிலை அறிவிப்பு

நியூயார்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்தவுள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

News image
நியூயார்க்கில் வரலாறு காணாத வெள்ளம்
Updated On :28 ஜனவரி 2024, 4:03 am

DIN

நியூயார்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்தவுள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மாகாணம் முழுவதும் இன்று இரவுமுதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் மேயர் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,

“நியூயார்க்கில் நேற்று இரவுமுதல் வரலாறு காணாத அளவில் வானிலை மோசமாக உள்ளது. மாகாணம் முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 5,300 வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

அடுத்த சில மணிநேரத்தில் மழை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாகாணம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே, சுரங்கப்பாதைகள் மற்றும் சாலையோரங்களில் யாரும் நிற்க வேண்டாம். அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.