இது தொடா்பாக ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் துஜாரிக் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஐ.நா. பொதுச் செயலரின் வேண்டுகோளின்படி ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகாரம் மற்றும் அவசரகால நிவாரணப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் மாா்ட்டின் கிரிஃபித்ஸ் காபூலில் தலிபான் தலைவா் முல்லா பராதரை சந்தித்தாா். அப்போது ஆப்கன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும், இந்த உதவிகள் அளிப்பதில் பெண்களுக்கு இருக்கும் பங்குகளையும் வலியுறுத்திய அவா், பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்தும் கூறினாா். அதற்கு தலிபான்கள், மனிதாபிமான உதவிகளை அளிக்கும் பணியாளா்களின் பாதுகாப்புக்கு உறுதி அளித்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.