கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வேலைக்கு செல்ல அச்சப்படும் ஆப்கன் பெண்கள்

காபூல் விமான நிலையத்தில் மொத்தமுள்ள 80 பெண் பணியாளர்களில், தற்போது 12 பெண்கள் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :12 செப்டம்பர் 2021, 10:09 am

DIN

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றி ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், ரபியா ஜமால் என்ற ஆப்கன் பெண் ஒரு கடினமான முடிவை எடுத்திருக்கிறார். தலிபான் பயங்கரவாதிகளின் உத்தரவை மீறி, தான் செய்துவந்த விமான நிலைய பணிக்கு திரும்பியுள்ளார். 

சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டிலேயே இருக்கும்படி பெண்களுக்கு தலிபான்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், மூன்று குழந்தைகளுக்கு தாயான 35 வயது ரபியாவுக்கு பணிக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை. இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில், "குடும்பத்தை நடத்த எனக்கு பணம் தேவைப்படுகிறது. வீட்டில் இருக்கும்போது பதற்றமாக இருந்தது. நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இப்போது, நன்றாக இருக்கிறேன்" என்றார்.

காபூல் விமான நிலையத்தில் மொத்தமுள்ள 80 பெண் பணியாளர்களில், தற்போது 12 பெண்கள் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர். தலைநகரில் குறைந்த அளவிலான பெண்களே பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை வேலைக்கு செல்ல வேண்டாம் என தலிபான்கள் எச்சரித்திருந்தனர். 

காபூல் விமான நிலையத்தின் பிரதான நுழைவாயில் பணிபுரிந்துவரும் ஆறு பெண் பணியாளர்களில் ஒருவரான ரபியாவின் சகோதரி குட்சியா ஜமாலிடம் பேசுகையில், "காபூலை தலிபான்கள் கைப்பற்றியது எனக்கு அதிரச்சியாக இருந்தது. மிகவும் அச்சப்பட்டேன். எனக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என என் குடும்பத்தினர் அச்சப்பட்டார்கள். ஆனால், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்னையும் இல்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.