எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அமைதிக்காக எந்த நாட்டுடனும் பணிபுரியத் தயார்: ஜோ பைடன்

உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து பணிபுரியத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

News image
ஜோ பைடன்
Updated On :21 செப்டம்பர் 2021, 4:15 pm

DIN

உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து பணிபுரியத் தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையில் செவ்வாய்க்கிழமை பேசிய அவர், அமெரிக்க எந்த நாட்டுடனும் பனிப்போரை வளர்க்க விரும்பவில்லை என்று சீனாவை மறைமுகமாக குறிப்பிட்டுக் கூறினார். 

உலகின் அமைதிக்காக எந்த நாட்டுடனும் இணைந்து அமெரிக்க பணிபுரியத் தயாராக உள்ளது. 

20 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத தாக்குதலின்போது இருந்த அமெரிக்கா தற்போது இல்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னையும், நட்பு நாடுகளையும் பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடும்.

வன்முறைகள், கொடுமைகள் இன்றி சிறுமிகள், பெண்கள் தங்களது உரிமைகளை பெற உலக நாடுகள் ஆதரிக்க வேண்டும். 

ஈரான் அணு ஆயுதங்களை பெறாமல் தடுப்பதில், அமெரிக்கா உறுதியாக உள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.