தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஏமன் வான்வழித் தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 35 பேர் பலி

ஏமனில் சவுதி தலைமையில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

News image

ஏமன் வான்வழித் தாக்குதல் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 35 பேர் பலி

Updated On :21 செப்டம்பர் 2021, 4:51 pm IST

ஏமனில் சவுதி தலைமையில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

ஏமன் நாட்டில் மரீப்  மாகாணத்தில் சிர்வா மாவட்டத்தில் சவுதி தலைமையிலான படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹவுதி அமைப்பினரின் 13 வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது.

பின் எதிர் தாக்குதல் நடத்திய கிளர்ச்சியாளர்களில் 35 பேர் இறந்து விட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஈரான் ஆதரவுடன் ஏமனின் மரீப் பகுதியில் எண்ணைக் கிணறுகளைக் கைப்பற்றும் முயற்சியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.