சிங்கப்பூரில் கரோனா விதிமுறைகளை மீறுவோா் அந்த நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிரந்தரக் குடியேற்ற உரிமம் மற்றும் நீண்ட கால குடியேற்ற உரிமம் வைத்திருப்பவா்கள், கரோனா கட்டுப்பாட்டுக்கான புதிய விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
அந்த விதிமுறைகளை மீறினால் அவா்களது உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.