விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒமைக்ரான் அலை ஆரம்பமா? நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

ஒமைக்ரான் அலை ஆரம்பமா?

Updated On :27 டிசம்பர் 2021, 6:29 am


வாஷிங்டன்: ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போதிருக்கும் பரிசோதனை தட்டுப்பாட்டினை விரைவில் சரி செய்வதாக வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

கரோனா பாதித்த குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருப்பதாக நியூ யார்க் மாகாண சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, 18 வயது வரையிலான குழந்தைகள், குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் விகிதம் டிசம்பர் 5ஆம் தேதி இருந்ததைக் காட்டிலும் தற்போது நான்கு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 5 வயதுக்கும் குறைந்தவர்கள், இவர்களுக்கு இதுவரை கரோனா தடுப்பூசிக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தற்போது கரோனா பாதிப்பு கடுமையாக அதிரித்து வருகிறது. அங்கு கடந்த 7 நாள்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,90,000 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து சுற்றுலா, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல் போன்றவற்றால், கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக வீடுகளியே கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கருவியை இறக்குமதி செய்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.