மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒமைக்ரான் அலை ஆரம்பமா? நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகள்

ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
ஒமைக்ரான் அலை ஆரம்பமா?
Updated On :27 டிசம்பர் 2021, 6:29 am

DIN


வாஷிங்டன்: ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நியூயார்க்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போதிருக்கும் பரிசோதனை தட்டுப்பாட்டினை விரைவில் சரி செய்வதாக வெள்ளை மாளிகை உறுதி அளித்துள்ளது.

கரோனா பாதித்த குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருப்பதாக நியூ யார்க் மாகாண சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, 18 வயது வரையிலான குழந்தைகள், குழந்தைகள் நல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் விகிதம் டிசம்பர் 5ஆம் தேதி இருந்ததைக் காட்டிலும் தற்போது நான்கு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 5 வயதுக்கும் குறைந்தவர்கள், இவர்களுக்கு இதுவரை கரோனா தடுப்பூசிக்க அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் தற்போது கரோனா பாதிப்பு கடுமையாக அதிரித்து வருகிறது. அங்கு கடந்த 7 நாள்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1,90,000 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையைத் தொடர்ந்து சுற்றுலா, குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுதல் போன்றவற்றால், கரோனா பரிசோதனை செய்து கொள்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், உடனடியாக வீடுகளியே கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் கருவியை இறக்குமதி செய்து, இப்பிரச்னைக்குத் தீர்வு காணப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.