லிபியா கடற்கரையில் 27 அகதிகளின் சடலங்கள் கரையொதுங்கியதாக செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
லிபியாவின் மேற்குக் கடலோர நகரமான காம்ஸில் 27 அகதிகளின் சடலங்கள் சனிக்கிழமை இரவு கரையொதுங்கின. இதுதவிர, மேலும் 3 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டனா். ஐரோப்பாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளாதில் அந்த 27 பேரும் பலியானதாகக் கருதப்படுகிறது.
அதையடுத்து, குறிப்பிட்ட பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.