உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக உயர்வு என ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் .
கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தில் உலகளவில் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளிலேயே அமெரிக்கா முதல் இடமும் , இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.
அமெரிக்காவில் 3.75 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 6.12 லட்சம் பேர் வரை இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3.1 கோடி பேர் .
இதையும் படிக்க | பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி: ஒரேநாளில் 1,318 பேர் பலி
மேலும் 30 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பாளர்களைக் கொண்ட நாடுகளாக பிரேசில் -1.98 கோடி , பிரான்ஸ் - 61.4 லட்சம் , ரஷ்யா -61.3 லட்சம் ,இங்கிலாந்து - 58 லட்சம் , துருக்கி - 56.8 லட்சம் , அர்ஜென்டினா-49 லட்சம் ,கொலம்பியா- 47.6 லட்சம் ,ஸ்பெயின் - 44.2 லட்சம் , இத்தாலி - 43.3 லட்சம் , ஈரான்-38.2 லட்சம் ,ஜெர்மனி - 37.7 லட்சம் , இந்தோனேசியா - 33.3 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பிரேசில் , அதிக கரோனா இறப்புக்களைக் கொண்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து 5.53 லட்சம் இறப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் 4.22 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது