உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக உயர்வு என ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் .
கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தில் உலகளவில் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளிலேயே அமெரிக்கா முதல் இடமும் , இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.
அமெரிக்காவில் 3.75 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 6.12 லட்சம் பேர் வரை இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 3.1 கோடி பேர் .
இதையும் படிக்க | பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி: ஒரேநாளில் 1,318 பேர் பலி
மேலும் 30 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பாளர்களைக் கொண்ட நாடுகளாக பிரேசில் -1.98 கோடி , பிரான்ஸ் - 61.4 லட்சம் , ரஷ்யா -61.3 லட்சம் ,இங்கிலாந்து - 58 லட்சம் , துருக்கி - 56.8 லட்சம் , அர்ஜென்டினா-49 லட்சம் ,கொலம்பியா- 47.6 லட்சம் ,ஸ்பெயின் - 44.2 லட்சம் , இத்தாலி - 43.3 லட்சம் , ஈரான்-38.2 லட்சம் ,ஜெர்மனி - 37.7 லட்சம் , இந்தோனேசியா - 33.3 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பிரேசில் , அதிக கரோனா இறப்புக்களைக் கொண்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து 5.53 லட்சம் இறப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இந்தியாவில் 4.22 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கா்ப்பிணி மகளை நீரில் மூழ்கடித்து கொன்றதாக தந்தை கைது

மக்களின் குரலை ஒடுக்க ஐடி விதிகளை கடுமையாக்கும் மத்திய அரசு கேஜரிவால் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்
ரூ.900 கோடியில் உருவான செங்கல்பட்டு தடுப்பூசி ஆலை முடங்க என்ன காரணம்? மக்களவையில் டி.ஆா்.பாலு கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



