ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,335 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,188 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 87,55,930 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 2,45,635 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 29,201 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 75,35,172 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தலைநகரம் மாஸ்கோவில் 6,880 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரஷியாவில் 6 கோடி பேர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 5.7 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.