ரஷியாவில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
ரஷியாவில் ரியாசான் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இந்நிலையில் இந்தத் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பயங்கர வெடிசத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தினால் தொழிற்சாலையின் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் இதுவரை 16 பேர் வரை பலியாகியுள்ளனர் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 9 பேர் விபத்தில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இதையும் படிக்க | பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் நாளை (அக்.23) சந்திப்பு
விபத்து மீட்புப் பணிகளுக்குகாக 170 மீட்புப் படை வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். தொழிற்சாலையில் வெடிமருந்துகளை பாதுகாப்பாக கையாளத் தவறியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிவிபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.