சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்

முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் முதல் பெரிய முயற்சியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும்

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 4:52 am IST

முத்தரப்பு பாதுகாப்புக் கூட்டணியின் முதல் பெரிய முயற்சியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரதன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் உதவியுடன் அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியா கட்டமைக்கவுள்ளது.

காணொலி முறையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், ‘புவியியல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகியவை இயற்கையான கூட்டாளிகள்; எங்களது நலன்களும் மாண்புகளும் பகிரப்படுகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளா்ச்சியடைந்து வரும் எங்களது கூட்டணிக்கு இந்த அமைப்பு பங்களிப்பை வழங்கும்’ என்றாா்.

அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பேசுகையில், ‘இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நீண்டகாலத்துக்கு அமைதியை நிலைநிறுத்துவதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதை அடைவதற்காக இந்தப் புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் கூட்டம் செப். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் ‘ஆக்கஸ்’ கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. க்வாட் கூட்டத்தில் அமெரிக்க அதிபா் பைடன், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமா் யோஷிஹிடே சுகா ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். அக்கூட்டத்திலும் சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.