

இந்தியாவிலிருந்து நேரடியாக கனடாவிற்கு விமானத்தில் செல்வதற்கான தடையை கனடா அரசு நீக்கியிருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.
இதையும் படிக்க | முழு அடைப்பு போராட்டம்: தில்லி எல்லைகளில் போக்குவரத்து முடக்கம்
இந்தியாவிலிருந்து நேரடி விமான சேவைக்கான தடையை கனடா செப். 26-ஆம் தேதி வரை நீட்டித்திருந்தது. இந்நிலையில் கனடாவில் இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், அதனை தற்போது நீக்கியிருக்கிறார்கள். இன்று(செப்-27) முதல் விமானச் சேவை தொடங்க இருக்கிறது.
கனடா செல்லும் பயணிகள் கண்டிப்பாக தடுப்பூசிகள் செலுத்தியிருக்க வேண்டும். 18 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கரோனா நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.