இலங்கையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட் விலை, ரூ. 500 உயர்த்தப்பட்டுத் தற்போது ரூ. 2,350 ஆக விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு மார்ச் 31 இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சிமெண்ட் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
எரிபொருள் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்த விலை உயர்வு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே, கடந்த மார்ச் 13 ஆம் தேதி ரூ. 1,350 ஆக இருந்த சிமெண்ட் மூட்டையின் விலையை ரூ. 500 உயர்த்தி, ரூ. 1,850 என விற்கத் தொடங்கினர்.
கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையில் மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே மீண்டும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு

உக்ரைன் துறைமுகத்தில் 13 இந்திய மாலுமிகளுடன் நிற்கும் வா்த்தக கப்பலை உன்னிப்பாக கவனிக்கிறோம்: இந்தியா

2 இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுக்கு ஜாமீன் உச்சநீதிமன்றம்





