ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சீனாவில் கரோனா புதிய உச்சம்

சீனாவில் புதிதாக கரோனா கண்டறிப்பட்டவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :6 ஏப்ரல் 2022, 7:28 pm

DIN

சீனாவில் புதிதாக கரோனா கண்டறிப்பட்டவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் கரோனா முதல்முறையாகக் கண்டறியப்பட்டிலிருந்து இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச தினசரி நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கையாகும்.

நாட்டில் கரோனா பரிசோதனை வசதிகள் முன்பைவிட மிக அதிகமாக உள்ளன. மேலும், குறிப்பிட்ட பகுதியோடு நின்றுவிடாமல் நாடு முழுவதும் பரவலாக கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதனால், முன்பைவிட அதிக எண்ணிக்கையிலானவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதால் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.