47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உக்ரைனின் கீவ் பகுதியில் மேலும் 900 உடல்கள் கண்டெடுப்பு

உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து மேலும் 900 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :16 ஏப்ரல் 2022, 8:48 am

DIN

உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து மேலும் 900 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த ரஷியா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுத்தது. போர் இரண்டு மாதங்களை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் பெரும்பாலான நகரங்கள் அழிந்துள்ளன. 

Story image

மேலும் உக்ரைன் பொதுமக்கள் மீது ரஷியப்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பாக கீவ் அருகே புச்சா பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்பட்ட நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து இருந்தன. 

இந்நிலையில் தலைநகர் கீவ் பகுதியில் ரஷியப் படையினர் பின்வாங்கிய நிலையில், அங்கு உக்ரைன் தரப்பில் பராமரிப்புப் பணி நடந்தபோது கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 900 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் அதில் 95% பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.