47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புச்சா படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; விசாரணை தேவை: அமைச்சர் ஜெய்சங்கர்

உக்ரைனின் புச்சா படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதுகுறித்த தீவிரமான, சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :6 ஏப்ரல் 2022, 8:31 am

DIN

உக்ரைனின் புச்சா படுகொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அதுகுறித்த தீவிரமான, சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இன்று மக்களவையில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், 

உக்ரைனின் புச்சாவில் நடந்த படுகொலை சம்பவத்தை எம்.பி.க்கள் பலரும் எடுத்துரைத்தனர். இந்த அறிக்கைகள் மிகவும் கவலையளிக்கிறது. அங்கு நடந்த கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது மிகவும் தீவிரமான விஷயம். சுதந்திரமான விசாரணை  நடைபெற வேண்டும். 

ரஷியா-உக்ரைன் மோதலுக்கு இந்தியா எதிர்க்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ரத்தம் சிந்துவதன் மூலமும், அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி கொடுப்பதன் மூலமும் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று நம்புகிறோம். இன்றைய காலகட்டத்தில், எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவார்த்தையை சரியான பதில்.

அனைத்து நாடுகளின் சர்வதேச சட்டம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பிற நாடுகள் மதிக்க வேண்டும். இந்தியா அமைதியின் பக்கத்தைத்தான் தேர்ந்தெடுக்கும்' என்று பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.